திருமலை விபத்தில் வைத்தியர் பலி!

0
5

திருகோணமலையின் தங்கநகர் பகுதியில் இன்று (17) இரவு இடம்பெற்ற விபத்தில் சேருவில வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தமிழ் பொதுமக்கள் பலருடைய உயிரை காப்பாற்றிய வைத்தியர் கெல்வின் அவர்களே இன்று (17) இரவு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார்.

தன்னுடைய மனைவி பிள்ளைகளை இரத்தினபுரியில் இருந்து பிரிந்து 1990 ம் ஆண்டு முதல் அவர் திருமலையில் பணியாற்றிவருகின்றார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து தனது புனிதமான சேவைக்காக 35 வருடங்கள் திருகோணமலையில் தமிழ்மக்களுக்காக சேவை செய்திருக்கிறார் என பலரும் அவரை நினைவுகூர்கின்றனர்.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here