கணவர் துப்பாக்கியால் சுட்டதில் மனைவி உயிரிழந்துள்ள சம்பவம் மெதகம பகுதியில் பதிவாகியுள்ளது.
மெதகம பொலிஸ் பிரிவின் பலகசர எனும் பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெண் ஒருவர் துப்பாக்கி சூட்டால் காயமடைந்துள்ளதாக மெதகம பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து குறித்த பெண் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார். எவ்வாறாயினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
குடும்ப தகராறு காரணமாக இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் சம்பவத்தில் உள்ளூர் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் சம்பவத்திற்கு பின்னர் சந்தேக நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.