ஜனாதிபதியின் பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுடன் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் துஷார உபுல்தெனியவின் சம்பளத்தில் பாதியை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, அவரது விளக்கமறியல் காலம் வரையில் அவருக்கு பாதி சம்பளம் வழங்ப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.