கினிகத்தேனை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (17) இரவு நுழைந்த சிறுத்தை அங்கு உறங்கிக் கொண்டிருந்த வளர்ப்பு நாயை வேட்டையாடிச் சென்ற காணொளி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மேலும் பீதி அடைந்துள்ள மக்கள், குடியிருப்பு பகுதிக்குள் நடமாடி வரும் சிறுத்தையை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுத்தைகளின் நடமாட்டம் காரணமாக தேயிலை மலைகளில் கொழுந்து பறிக்கும் தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியுள்ளதாகவும், தங்களது வீடுகளில் செல்லப்பிராணிகளாக வைத்திருக்கும் நாய்களை சிறுத்தைகள் வேட்டையாடும் சம்பவம் தற்போது அதிகரித்துள்ளதாகவும் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.