தென்கொரியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 25% ஆக உயர்த்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்காவின் வர்த்தக ஒப்பந்தங்கள் மிகவும் முக்கியமானவை. ஒப்புக்கொண்டபடி நாங்கள் வரியைக் குறைத்துள்ளோம். அதே வேகத்தை எங்கள் வர்த்தகக் கூட்டாளிகளிடமிருந்தும் எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்துள்ளார்.




