தென்னாப்பிரிக்கா அணி ஒரு விக்கெட்டால் வெற்றி

0
226

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி நேற்று (27) நடைபெற்றது. நேற்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 270 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக, சவுத் ஷகீல் 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்தநிலையில், 271 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 47.2 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக எய்டன் மார்க்ரம் 91 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்ரிடி 45 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here