தெற்கு காஸாவில் உள்ள ராபாவில் இடிபாடுகளில் ‘மனிதாபிமான நகரம்’ ஒன்றை கட்டும் திட்டத்தை இஸ்ரேலிய பாதுகாப்பமைச்சர் காட்ஸ் முன்மொழிந்தார்.
தெற்கு காஸாவின் இடிபாடுகளில் ஒரு “மனிதாபிமான நகரத்தை” நிர்மாணிப்பதற்கான செயல்பாட்டுத் திட்டங்களை வகுக்க இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நகரத்திற்கு உள்ளே நுழைந்ததும், பலஸ்தீனியர்கள் மற்ற நாடுகளைத் தவிர வேறு நாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று காட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் 600,000 மக்களையும், இறுதியில் முழு பலஸ்தீன மக்களையும் தங்க வைக்க இவ்விடம் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் உருவாக்க நினைக்கும் நகரம் ஒரு வதை முகாமாக இருக்கும் என்றும் பலஸ்தீனியர்களை அங்கு வைப்பது இன அழிப்புக்கு சமம் என்று இஸ்ரேல் முன்னாள் பிரதமர் எஹுட் ஓல்மெர்ட் கூறினார்.
இஸ்ரேல் ஏற்கனவே காஸா மற்றும் மேற்குக் கரையில் போர்க்குற்றங்களைச் செய்து வருகிறது. இந்த முகாம் கட்டுவது அந்தக் குற்றங்களை பெரிய அளவில் அதிகரிக்க வழிவகுக்கும் என்று ஓல்மெர்ட் கூறினார்.