தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பொகவந்தலாவை தெரேசியா தமிழ் வித்தியாலயத்திற்கு ஒரு தொகை நிறப் பூச்சுகள் (பெயிண்ட்) பெற்றுக் கொடுக்கப்பட்டன.
தெரேசியா தமிழ் வித்தியாலயத்தின் பிரதி அதிபர் பூபாலன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சோ. ஸ்ரீதரன் கலந்து கொண்டார்.
அத்துடன் தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் திருமதி வைலட்மேரி, பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரத்தின் பிரத்தியேக செயலாளர் சுப்பையா கமல்தாசன், வட்டார அமைப்பாளர் லெனின் குமார், மற்றும் முத்துக்குமார் ,சுரேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.