தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து தந்தையும் மகளும் உயிரிழப்பு.

0
173

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம நுழைவாயிலுக்கு அருகாமையில் மில்லனிய பகுதியில் காரொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரம் விபத்தினால் தாயும் மற்றொரு மகளும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 2.10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 39 வயதுடைய தந்தையும், 04 வயதுடைய மகளுமே உயிரிழந்தள்ளதாக மில்லனிய பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளனர்.

காயமடைந்த தாயும் மற்றைய மகளும் ஹொரனை மற்றும் நாகொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை தகவல் மையம் தெரிவித்துள்ளது.

விபத்தின் காரணமாக அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை என்றும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here