தெல்தோட்டை நூல்கந்தூர அப்பகோணா தோட்ட மக்களுக்கு வழிப்படுவதற்கு ஆலயம் இல்லாத நிலையில் சிவன் ஆலயத்தை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
தெல்தோட்டை நூல்கந்தூர அப்பகோணா தோட்டத்தில் இருக்கும் சிவன் கோவில் கட்டப்பட்டு பல வருடகாலமாக இடைநடுவில் கைவிடப்பட்ட ஆலயத்தின் வேளைத்திட்டங்களை பூர்த்தி செய்வதற்க்கான அடிக்கல் நாட்டி ஆரம்பிக்கப்பட்டது,
ஹங்குராங்கெத்த பிரதேச சபை உப தவிசாளர் கே.ரூஸன்ஸ் மற்றும் அப்பகோணா தோட்ட முகாமையாளர் சமிந்த பண்டார தோட்ட உதவி முகாமையாளர் சமீர அதிகாரிகள் தலைமையில் ஆலய நிர்மான பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் போது ஞாபக சின்னமாக மரகன்றுகள் நாட்டி வழிப்பாடுகள் இடம்பெற்றது இதில் தோட்ட மக்கள் தோட்ட தலைவர்கள் இளைஞர்கள் கலந்துகொண்டு இருந்தனர்,
அங்கு வசிக்கும் தோட்ட மக்களின் வேண்டு கோள் நாட்டில் பல பாகங்களில் வசிக்கும் சிவன் பக்தர்கள் பணம் படைத்தவர் மனம் படைத்தவர் நல் உள்ளங்கள் இந்த ஆலயத்திற்க்கு பொருட்கள் அல்லது நிதி உதவிகளை வழங்கி எமது ஆலயத்தை முழுமையாக செய்து தந்து உதவுமாறு தோட்ட மக்கள் கேட்டுகொள்கின்றனர்.