தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

0
3

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.

தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்த வீதி, களுபோவில பிரதேசத்தில் இன்று காலை 6.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அங்கு படுகாயமடைந்தவரின் வலது தோள்பட்டைக்கு அருகில் 02 குண்டுகள் வீசப்பட்ட நிலையில், களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த நபர் 45 வயதான நகராட்சி ஊழியர் ஆவார்.

போதைப்பொருள் வியாபாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here