தெஹிவளை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட ஹீல் வீதியில் அமைந்துள்ள வீடொன்றை காவல்துறையினர் சுற்றிவளைத்துள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பின்போது அவ்வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 7 பெண்களும், நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்களில் இருவர் 23, 29 வயதான பாணந்துறை மற்றும் வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன், ஏனைய 5 பெண்களும் வெளிநாட்டினத்தவர்கள் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.