தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 33வது விளையாட்டு விழாவின் நுவரெலியா பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டிகள் (13/11/2022) நுவரெலியா மாநகர சபை மைதானத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமானது.நுவரெலியா பிரதேச மட்டத்திலான பல விளையாட்டு கழகங்கள் உள்வாங்கப்பட்டு பல போட்டிகளில் பங்கேற்றியது.
இவ்விழாவில் வெற்றியீட்டிய கழகங்கள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கு வெற்றி சான்றிதழ்களும் கேடையங்களும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட மற்றும் பிரதேச காரியாலயங்களில் பணியாற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்கள் நுவரெலியா மாவட்ட பொறுப்பதிகாரி மாவட்ட சம்மேளனத்தின் தலைவர் செயலாளர் உட்பட சம்மேளனத்தின் செயலாளர்கள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்