தொழில்நுட்பத்தால் சினிமா துண்டாடப்பட்டு விட்டது- கவிஞர் வைரமுத்து வேதனை

0
18

வ.கவுதமன் எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம், ‘படையாண்ட மாவீரா’. பூஜிதா, சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.இந்த படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

சென்னையில் நடந்த பட விழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்று பேசும்போது, “இன்றைக்கு சினிமாவின் போக்கும், நோக்கும் துன்பப்படும் நிலையில் இருக்கிறது. 200 படங்கள் வெளிவந்தால் அதில் 10 படங்கள் மட்டுமே வெற்றிக்கு பக்கத்தில் இருக்கின்றன. வாழ்க்கையை பார்த்து எடுக்காமல், படங்களை பார்த்து சினிமா எடுப்பதே இதற்கு காரணம். சினிமா, தற்போது தொழில்நுட்பத்தால் துண்டாடப்பட்டு இருக்கிறது. இன்றைக்கு சில இயக்குனர்கள், தனது துணை இயக்குனர்களுக்கு கூட கதை சொல்வதில்லை. இதில் ரகசியம் என்ன வேண்டியுள்ளது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here