தோட்டத் தொழிலாளர்களின் ஊதியம் இந்த ஆண்டுக்குள் அதிகரிக்கப்படும்;ஜனாதிபதி

0
11

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியம் இந்த ஆண்டுக்குள்  ரூ.1,750 ஆக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

மலையக சமூகத்தைச் சேர்ந்த 2,000 பயனாளிகளுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்திய நிதி உதவியுடன் 10,000 வீடுகளைக் கட்டும் திட்டத்தின் நான்காவது கட்டத்தின் கீழ் இந்த நிகழ்வு இன்று (12) காலை நடைபெற்றது. விழாவின் போது ஜனாதிபதி 2,000 பயனாளிகளுக்கு அடையாளமாக வழங்கப்படும் உரிமைப் பத்திரங்களை வழங்கினார்.

கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி திசாநாயக்க, மலையக சமூகம் நாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளதுடன், இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக கடினமான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாகக் கூறினார்.

அவர்களுக்கு அடிப்படைத் தேவைகள் மற்றும் கண்ணியமான வாழ்க்கை கிடைப்பதை உறுதி செய்யும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“அவர்களுக்கு வீட்டு உரிமையை வழங்குதல் மற்றும் நியாயமான ஊதியத்தை உறுதி செய்தல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தப்படுகிறது.

அவர்கள் நீண்ட காலமாக ரூ. 1,750 தினசரி ஊதியத்தை கோரி வருகின்றனர், இந்த ஆண்டுக்குள் அதை வகையிலேனும் நிறைவேற்ற நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்,” என்று ஜனாதிபதி மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here