தோனி மகளுக்கு மெஸ்ஸி அளித்த பரிசு; இணையத்தில் வைரல்!

0
195

கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையை ஆர்ஜென்டீனா அணி வெற்றியை சுவீகரித்து சாதனை படைத்தது. மெஸ்ஸி கேப்டனாக பொறுப்பேற்று முதல்முறையாக கோப்பை வென்றது ஆர்ஜெண்டீனா.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான தோனியின் மகள் ஜிவாவுக்கு தான் கையெழுத்திட்ட ஆர்ஜென்டீனா அணியின் டீ-சர்ட்டை மெஸ்ஸி பரிசாக அனுப்பியுள்ளார்.

அந்த டீ-சர்ட்டை அணிந்து இன்ஸ்டாவில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள தோனியின் மகள், ‘தந்தையை போல் பிள்ளை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த டீ-சர்ட்டில் பாரா ஜீவா என எழுதப்பட்டு அதற்கு கீழ் மெஸ்ஸி கையெழுத்திட்டுள்ளார்.

இந்நிலையில் ஜிவாவின் இன்ஸ்டா பதிவை தோனி மற்றும் மெஸ்ஸியின் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here