நாடும் வீடும் நலம்பெற தீப ஒளி எங்கும் பரவட்டும் !

0
172

பொருளாதார நெருக்கடிகளிலிருந்து விடுபட்டு நாடும் வீடும் நலம் பெற தீப ஒளி எங்கும் பரவ வேண்டும் என வாழ்த்துவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தமது செய்தியில்,

தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து புத்தாடை அணிந்து பட்டாசு கொளுத்தி ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொண்டு பலகாரம் பச்சடிகளுடன் உற்றார் உறவினர் மற்றும் அயலவர்களுடன் குதூகலமாகக் கொண்டாடும் தீபாவளிப் பண்டிகையை அடுத்த ஆண்டிலாவது மனமுவந்து கொண்டாடும் நிலை உருவாக வேண்டும் என்று பிரார்த்தித்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள், விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு அவர்களின் எதிர்காலம் சிறக்க அரசாங்கம் உரிய முறையில் நிவாரணங்களை வழங்க வேண்டும். தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் வேலை நாட்களுக்கு உத்தரவாதம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அத்தோடு, நாட்டில் பண்டிகைக் காலத்தில் மீண்டும் ஒரு கொரோனா கொத்தணி பரவாமல் இருக்க பொது மக்கள் மிகவும் பொறுப்புடன் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தமது பாதுகாப்பை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here