நாடு திரும்பினார் ஜனாதிபதி அனுர குமார

0
4

ஜெர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (15) காலை நாடு திரும்பினார்.

குறித்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் பங்கேற்றிருந்த அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் ஆகியோர் இன்று காலை 08.58 மணிக்கு கட்டார் விமான சேவை ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் அழைப்பின் பேரில் ஜனாதிபதியும் அவரது குழுவினரும் கடந்த 11 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here