நாட்டின் கடற்கரையில் ஒதுங்குகின்ற எந்த பொருளையும் பொதுமக்கள் தொடவேண்டாம்; மக்களுக்கு எச்சரிக்கை

0
191

நாட்டின் கடற்கரையில் ஒதுங்குகின்ற பொருட்கள் எதனையும் பொதுமக்கள் தொட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

கொழும்பு துறைமுகத்திற்கு அருகே நீர்கொழும்பில் கரையொதுங்கியுள்ள பொருட்கள் தீ விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து கசியும் இரசாயன திரவியங்களின் படிமங்களாக அவை இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

எனவே கடலோரமாக ஒதுங்குகின்ற பொருட்கள் எதனையும் பொதுமக்கள் தொட வேண்டாம் என்றும் அதுகுறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டிருந்த நிலையில், கடற்படையினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர்.

எனினும் நேற்று காலை முதல் குறித்த கப்பலில் மீண்டும் தீப்பரவல் ஏற்பட்டிருந்ததுடன், இதனால் இருவர் காயமடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பேர்ல் கப்பலில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதுடன் , கப்பலில் இருந்து 25 பணிக்குழாமினர் கடற்படையினரால் நேற்று மீட்கப்பட்டனர். மேலும் தீயணைப்பு பணியில் இலங்கை கடற்படைக்கு மேலதிகமாக இந்திவும் கப்பல்களையும் விமானங்களையும் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here