நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

0
2

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 7 மாவட்டங்களில் உள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இன்று (14) மாலை 4.00 மணி தொடக்கம் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் பாதுக்க, காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர, புலத்சிங்கள மற்றும் அங்கலவத்த மற்றும் கண்டி மாவட்டத்தில் கங்கை இஹலகோரல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தில் தெரணியகல, தெஹியோவிட்ட, யட்டியந்தோட்டை, நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, குருவிட்ட, நிவித்திகல, எஹலியகொட மற்றும் அயகம ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here