நாட்டில் கரும்பூஞ்சை நோயினால் முதலாவது மரணம்.

0
164

கொவிட் தொற்றின் பின்னரான விளைவுகளால் உண்டாகும் கரும்பூஞ்சை நோயினால் ஏற்பட்ட முதலாவது மரணம் நாட்டில் பதிவாகியுள்ளது.

காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் இந்த மரணம் சம்பவித்துள்ளது.

இந்த நபர் சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும், அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில் அவர் கரும்பூஞ்சை நோயினால் பீடிக்கப்பட்டிருந்தாரெனக் கண்டறியப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர், எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here