கடந்த இரண்டு மாதங்களில், நாட்டில் நாளாந்த மின்சார பாவனைக்கான தேவை, வரலாறு காணாத அளவில் குறைந்துள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவிக்கையில், ஒரு வருடத்திற்கு முன்னர் நாளாந்த மின்சார பாவனை 48 முதல் 49 மில்லியன் யூனிட் ஆக இருந்தது.
எனினும், தற்போது நாளொன்றுக்கு 38 முதல் 39 மில்லியன் யூனிட் வரை குறைந்துள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.