சந்தையில் தற்போது சில மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை போஞ்சி, கரட், லீக்ஸ், மற்றும் முள்ளங்கி போன்ற மரக்கறிகள் கிலோ ஒன்று 400 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு கிலோகிராம் தக்காளி 500 ரூபாயாகவும் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 1000 ரூபாயாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் விவசாயிகளிடம் கொள்வனவு செய்யப்படுகின்ற விலையை விட அதிகரித்த விலையிலேயே மரக்கறிகள் விற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் அண்மைக்காலாக அதிகளவான பொருட்களின் விலை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.