நானுஓயா காவல்துறை பிரிவுக்குட்பட்ட நானுஓயா குறுக்குப் பாதையில் லொறியொன்று விபத்துக்குள்ளான சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மகியங்கனையிலிருந்து அட்டன் பகுதிக்கு மணல் ஏற்றிச்சென்ற லொறியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இவ்விபத்து இடம்பெற்றி ருக்கலாம் என்று நானுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
லொறியின் சாரதி எவ்வித பாதிப்புமின்றி உயிர் தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நானுஓயா குறுக்குப் பாதையில் மணல் லொறி போன்ற அதிக பாரம் சுமந்து வரும் வாகனங் களை இப்பாதையில் பயணிக்க தடைவிதித்து அறிவித்தல் காட்சிப்படுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(டி.சந்ரு – செ.திவாகரன்)