நாரஹேன்பிட்டி பகுதி வீடொன்றில் ஏற்பட்ட தீ பரவலில் ஒருவர் உயிரிழப்பு

0
6

நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவின் ‘397 வத்த’ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று (23) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தீ விபத்தில் சிக்கி தீக்காயங்களுக்கு ஆளான நபர், காவல்துறையினரால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் , குறித்த வீட்டில் வசித்து வந்த சுமார் 50 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, மேலும் சம்பவம் குறித்து நாரஹேன்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here