நாளை முதல் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை.

0
78

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

அதன்படி நாளை முதல் மே 19 வரை தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு
முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் தெரிவித்துள்ளது

இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ள நிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.மேலும் 3, 527 மத்திய நிலையங்களில் இந்த பரீட்சைகள் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here