மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் நாளை முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றில் ஈடுபட உள்ளார்கள் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட கம்பனிகளுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இந்நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கும் வரையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் தொண்டமான் கூறினார்.