நாளொன்றுக்கு 10 மில்லியன் ரூபா இழப்பு

0
62

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அரச பஸ்களில் இலத்திரனியல் அட்டை அல்லது கியூ.ஆர் குறியீடு மூலமாக கட்டணம் அறவிடும் முறைமையினை அறிமுகப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இந்த தகவலை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (11) பாராளுமன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.

இத்திட்டம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இலங்கை போக்குவரத்து சபையினால் புதிய இணையத்தளம் மூலம் பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சில பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஒரு நாளைக்குரிய மொத்த வருமானத்தை உரிய வகையில் குறித்த டிப்போக்களிடம் கையளிப்பதில்லை. இதனால் நாளொன்றுக்கு சுமார் 10 மில்லியன் ரூபா நஷ்டத்தை இலங்கை போக்குவரத்து சபை சந்திக்கிறது.

ஆகவே, இலத்திரனியல் அட்டை அல்லது கியூஆர் குறியீட்டு முறைமையுடன் கூடிய பணம் செலுத்தும் முறை சுமார் இரண்டு மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும்.

இந்த முயற்சியானது 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை போக்குவரத்து சபைக்காக அறிவிக்கப்பட்ட அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சியின் ஒரு பகுதியாகும், இது 2024 இல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here