தேசியப் பொங்கல் நிகழ்வுக்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணம் வந்திருந்தார்.
அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் சில சிவில் சமூக அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன.
யாழ் – நல்லூருக்கு அண்மித்த பகுதியில் காவல்துறையினர் – போராட்டக்காரர்கள் ஆகியோருக்கிடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதன்காரணமாக போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நீர்த்தாரையை பயன்படுத்தி சில மாணவர்கள் சம்பூ போட்டு குளித்து மகிழ்ந்திருந்தனர்.