நுவரெலியாவில் முகப்புத்தக களியாட்ட நிகழ்வொன்றில் போதை விருந்து: 30 பேர் கைது!

0
14

நுவரெலியா கிரகறி வாவி கரையோரத்தில் உள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்ற முகப்புத்தக களியாட்ட நிகழ்வொன்று சுற்றிவளைப்பப்பட்டதில் போதைப்பொருட்களுடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று (19) மாலை இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர் .

நுவரெலியா பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் போதைப்பொருட்களுடன் முகப்புத்தக (பேஸ்புக்) களியாட்ட நிகழ்வொன்று இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கஞ்சா, ஐஸ், போதைப்பொருள் மாத்திரைகள் , குஷ் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதமாக வெளிநாட்டில் இருந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகள் வைத்திருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் ஆண்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 38 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் அனைவரும் வெளி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் நுவரெலியா நீதவான் நீதிமன்றில்
நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here