பண்டிகைக் காலத்தை முன்னிட்டு (12) ஆம் திகதி தொடக்கம் பல வகையான அரிசிகள் 100 ரூபாவுக்கும் குறைவான விலையில் ´சதொச´ வில் பெற்றுக்கொள்ள முடியும். எனவும் வருட இறுதி வரையில் இந்தச் சலுகை நடைமுறையிலிருக்கும் என்று வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை ,50 வகையான அத்தியாவசியப் பொருட்களை ,சதொச குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் நுவரெலியா சதொச நிறுவனத்தில் ஒரு அத்தியாவசியப் பொருட்களையும்
உரிய முறையில் பெற்றுக்கொள்ள முடியாமல் முறைகேடு நடப்பதாகவும் உரிய முறையில் பொருட்கள் வழங்கப்படுவதில்லை எனவும் பொதுமக்கள் தரப்பில் புகார்கள் தெரிவிக்கப்படுகின்றது
டி.சந்ரு செ.திவாகரன்