நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் மண்சரிவு!!

0
232

நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் லிந்துலை நகரப்பகுதியில் பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால் ஒருவழி போக்குவரத்தாக இடம்பெற்று வருவதாக லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குறித்த மண்சரிவு 03.06.2018 அன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மண்மேடும், கற்பாறைகளும் சரிந்து விழுந்துள்ளதனால் இதனை சீர் செய்வதற்கு லிந்துலை பொலிஸாரும், வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

DSC07841 DSC07846

தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையால் வீதிகளில் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படுவதனால் வாகனங்களை வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செலுத்த வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here