நுவரெலியா – உபபுசல்லாவ பிரதான வீதி தற்போது புணரமைக்கப்பட்டு வருகிறது . மோட்டார் சைக்கிள் பயணித்த 50 வயது மதிக்கத்தக்க நுவரெலியா ரூவான்எலிய பகுதியை சேர்ந்த ஒருவரே ஆண்னொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பாதையில் விழுந்து கிடந்த போது பின்னால் வந்த மாநகரசபைக்கு சொந்தமான பவுசர் ஒன்று அவர் மீது ஏறியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா மேற்கொண்டு வருகின்றனர்.



