நுவரெலியா மாநகர சபையில் நடைபெற்ற மாதாந்த பொதுக் கூட்டத்தில் இருந்து ஊடகவியலாளர்கள் வெளிநடப்பு செய்தனர்!!

0
169

நுவரெலியா மாநகர சபையின் நவம்பர் மாதத்திற்கான மாதாந்த பொதுக்கூட்டம் மாநகர முதல்வர்
சந்தனலால் கருணாரத்ன தலைமையில் இன்று 13.11.2018 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.கூட்டம் ஆரம்பித்து சில நிமிடங்களின் பின் மாநகர சபையின் குழுக் கூட்டம் அறிக்கை
சமர்ப்பிக்கும்படி முதல்வர் கூறியதை அடுத்து அக்கூட்டத்தில் சமுகமளித்திருந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் போனஸ் பட்டியில் உறுப்பினரான எம். பளீல் மாநகர சபை குழுக்கூட்ட அறிக்கை சமர்ப்பிக்கும் பொழுது ஊடகவியலாளர்களை வெளியேற்றவேண்டும். மத்திய மாகாண உதவி செயலாளர் கடித மூலம் தனக்கு அனுப்பியிருப்பதாக கூறினார்.

இதற்கு பதிலளித்த மாநகர முதல்வர் சந்தனலால் கருணாரத்ன இக்கூட்டத்தில் ஊடகவியலாளர் இருக்கட்டும் எதிர்வரும் கூட்டங்களில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாநகரசபை பொதுக்கூட்டம் நடைபெற்ற பின் தானும் மாநகர சபை ஆணையாளரும் ஊடகவிலாளர்களுக்கு சம்பந்தப்பட்ட அறிக்கை தொடர்பாக விபரங்களை தெரிவிப்பதாக கூறினார்.

இதனைத் தொடர்ந்து ஊடகவிலாளர்கள் குழுக்கூட்ட அறிக்கையில் தான் முக்கியமான விடயங்கள் பேசப்படும் அந்த கூட்டத்திற்கு எங்களுக்கு சமுகமளிக்கமுடியாவிட்டால் இக்கூட்டத்தில் இருப்பதில் எந்தவித பிரயோசனமும் இல்லை என கூறி கூட்டத்தில் அனைத்து ஊடகவியலாளர்களும் வெளிநடப்பு செய்தனர்.

நடந்த முடிந்த நுவரெலியா மாநகர சபை தேர்தலில் நடைபெற்ற 09 வட்டாரங்களிலும் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற்றது. இத் தேர்தலில் தோல்வியுற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு கிடைத்த போனஸ் பட்டியலில் தெரிவான எம். பளீல் என்பவரே ஊடகவிலாளர்களை வெளிநடப்பு செய்யவேண்டுமென கூறியதும் குறிப்பிடத்தக்கது.

 

டீ. சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here