நெப்போலியன் காலத்து நகைகள் கொள்ளை: பிரான்ஸ் நாட்டின் அருங்காட்சியகம் மூடல்

0
3

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள இலூவா அருங்​காட்​சி​யகம். இங்கு மோனோலிசா ஓவி​யம் உட்பட வரலாற்று சிறப்புமிக்க 33,000 கலைப் பொருட்​கள், சிற்​பங்​கள், நகைகள், ஓவி​யங்​கள் காட்​சிக்கு வைக்​கப்​பட்​டுள்​ளன. இங்​குள்ள கலைப் பொருட்​கள் மற்​றும் விலைம​திப்​பற்ற பொருட்​கள் பல முறை திருடு​போ​யுள்​ளன. கொள்ளை முயற்சி சம்​பவங்​களும் நடை​பெற்​றுள்​ளன.

இந்​நிலை​யில் இந்த அருங்​காட்​சி​யகத்​தில் நேற்று முன்​தினம் ஒரு கொள்ளை சம்​பவம் நடை​பெற்​றுள்​ளது. ஸ்கூட்​டரில் வந்த கொள்​ளை​யர்​கள் அருங்​காட்​சி​யகத்​தில் கட்​டிட பராமரிப்பு நடை​பெற்ற இடத்​தின் வழி​யாக ஊடுரு​வி​யுள்​ளனர்.

ஹைட்​ராலிக் ஏணியை பயன்​படுத்தி அருங்​காட்​சி​யகத்​தில் நுழைந்த கொள்​ளை​யர்​கள், அப்​போலோ வளாகத்​தில் உள்ள பிரெஞ்சு மன்​னர்​கள் மற்​றும் ராணி​கள் பயன்​படுத்​திய 9 கிரீடங்​கள் மற்​றும் நகைகளை கொள்​ளை​யடித்​துள்​ளனர். இது மன்​னர் நெப்​போலியன் காலத்து நகைகள் ஆகும்.

டிஸ்க் கட்​டர் மூலம் நகைககள் வைத்​திருந்த கண்​ணாடி பெட்​டியை வெட்டி கிரீடங்​கள் மற்​றும் நகைகளை கொள்​ளை​யர்​கள் எடுத்​துச் சென்​றுள்​ளனர். இந்த கொள்ளை சம்​பவம் 7 நிமிடங்​களில் முடிந்​துள்​ளது. நன்கு திட்​ட​மிட்டு இந்த கொள்ளை சம்​பவத்தை கொள்​ளை​யர்​கள் அரங்​கேற்​றி​யுள்​ளனர் என பிரான்ஸ் நாட்​டின் உள்​துறை அமைச்​சர் லாரன்ட் நுனஸ் தெரி​வித்​தார்.

பிரான்ஸ் நாட்​டின் பிரபல அருங்​காட்​சி​யகத்​தில் மிகப் பெரிய கொள்ளை சம்​பவம் நடை​பெற்​றுள்​ளதை அந்​நாட்டு கலாச்​சா​ரத்​துறை அமைச்​சர் ரச்​சிதா ததி நேற்று காலை அறி​வித்​தார்.

இந்த கொள்ளை சம்​பவம் குறித்து போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். அருங்​காட்​சி​யகத்​துக்கு ஏற்​பட்ட சேதம் மதிப்​பீடு செய்​யப்​பட்டு வரு​கிறது. கொள்ளை சம்​பவத்​தையடுத்​து, இலூவா அருங்​காட்​சிகம் நேற்று மூடப்​பட்​டது. அருங்​காட்​சி​யகம் முன்பு தடுப்​பு​கள் அமைக்​கப்​பட்​டன. அங்கு நேற்​று ​பார்​வை​யாளர்​கள்​ செல்​ல அனு​ம​திக்​கப்​படவில்​லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here