மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிக்குட்பட்ட நோர்வூட் நிவ்வெளி பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலையில் நேற்று (09) ம் திகதி மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனையின் போது மேலும் 09 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களுடன் நெருக்கமான உறவை பேணி 200 இற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நோர்வூட் தொழிற்சாலையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பறிசோதனையில் ஐந்து பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த தொழிற்சாலையில் வேலை செய்யும் இருவர் மருந்து எடுப்பதற்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு சென்ற போது மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பறிசோதனையில் அவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் 25 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பறிசோதனையில் ஆறு பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்தே
நேற்று (09) சுமார் 100 பேருக்கு என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கே.சுந்தரலிங்கம்