வடமத்திய நைஜீரியாவில் 80 பேரை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் 60 பேர் பலியாகியுள்ளனர்.
நைஜீரியாவில் மழைக்காலங்களில் படகு விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. எனினும், அந்நாட்டு மக்களுக்கு படகு போக்குவரத்துதான் முக்கியத்துவமாக வாய்ந்ததாக இருக்கிறது.
நைஜீரியாவின் வட – மத்திய நைஜர் மாநிலத்தில் பயணிகள் 80 பேரை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்தனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் இன்னும் தேடப்பட்டு வருகின்றனர்.
படகு அதிக சுமையுடன் இருந்ததால், மரத்தின் அடிப்பகுதியில் மோதியதால் படகு கவிழ்ந்ததின் விபத்திற்கான காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது.