பந்தை பிடிக்கச் சென்று மோதிக்கொண்டதில் ஒருவர் பலி!

0
65

மினுவாங்கொடை அலுதேபொல பகுதியிலுள்ள விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின்போது ஏற்பட்ட விபத்தில் 41 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

விளையாட்டின்போது பந்தை பிடிக்க முயன்ற இரண்டு வீரர்கள் மோதியதில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காயமடைந்த வீரர் மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கட்டுவெல்லேகம, பலுகஹவெல பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here