பலா மரத்தில் இருந்து கீழே விழுந்த நபர் பலி- பொல்அதுபலாத பிரதேசத்தில் சம்பவம்

0
184

அகுங்கல்ல, பொல்அதுபலாத பிரதேசத்தில் பலா மரத்தில் இருந்து விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் நேற்று மாலை வீட்டுக்கு அருகில் உள்ள தோட்டத்தில் உள்ள பலா மரத்தில் பலா பறிப்பதற்காக ஏறியுள்ளதுடன், அவர் மரத்தில் இருந்து இறங்கும் போது தவறி கீழே இருந்த கருங்கல் மீது விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.

அதே பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று இடம்பெற உள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அகுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here