பல்பொருள் அங்காடியில் தாக்கப்பட்ட யுவதி விவகாரம் – ஐவர் கைது

0
72

பொரளை பகுதியில் அமைந்துள்ள கார்கில்ஸ் ஃபுட் சிட்டியின் கிளை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் சமூக ஊடகங்களில் பிரபலமான கார்கில் ஃபுட் சிட்டி கிளையில் பெண் வாடிக்கையாளரை தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய ஐந்து ஊழியர்களை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சில காரணங்களுக்காக, வணிக ஊழியர்களால் பெண் வாடிக்கையாளர் தாக்கப்பட்ட காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன.

அதன்படி ஹன்வெல்ல பகுதியில் உள்ள கார்கில் ஃபுட் சிட்டியின் கிளை ஒன்றில் இது தொடர்பான சம்பவம் நடந்ததாக செய்தி பரவியது.

ஆனால், பொரளை பகுதியில் அமைந்துள்ள கார்கில்ஸ் ஃபுட் சிட்டியின் கிளை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காணொளியை அடிப்படையாக வைத்து கைது நடவடிக்கையில் ஈடுgட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் பொரளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மேலும், இது தொடர்பிலான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்காக வெட்டக்கப்படுவதாகவும் குறித்தவாடிக்கையாளரை அவமானப்படுத்தியமைக்கு வருந்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன் விசாரணைகளையும் முன்னெடுப்போம். இதற்கான பொறுப்பையும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம். எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here