பல்வேறு பிரச்சினைக்கு மத்தியில் கொண்டு வரப்பட்ட வரவு செலவு திட்டம் பாராட்டுதலுக்குரியதே.

0
172

நாட்டில் கொண்டு வரப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டமானது மக்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலை காணப்பட்டாலும் உலகளவில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.இலங்கை அதில் நூறு சதாவீதம் பாதிக்கப்பட்டுள்ளது இதனால் ஏனைய நாடுகளை விட எமது நாடு மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

நிலையிலேயே இந்த வரவு செலவு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது எமக்கென்று எந்த விதமான வருமான வழிகளும் கிடையாது உற்பத்தியும் கிடையாது பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி கண்டுள்ள இந்நிலையிலும் இப்படியாவுது ஒரு வரவு செலவு திட்டத்தினை கொண்டுவந்திருப்பது பாராட்டுவதற்குரியது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸிஸ் உப செயலாளருமான சச்சதாநந்தன் தெரிவித்தார்.

வரவு செலவு திட்டம் குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…..

இந்த நாட்டிலே சொந்த தயாரிப்பு இல்லை.பொருளாதார பிரச்சினை அந்நிய நாடுகள் இல்லாவிட்டால் இந்த நாட்டில் உள்ளவர்கள் யாசகம் கேட்கவேண்டிய நிலை தான் காணப்படுகின்றன. இப்படிபப்பட்ட நிலையில் கொரோனாவுக்கு இன்றும் 600 தொடக்கம் 700 வரை உள்ளாகின்றன நிலையில் இந்நிலையில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிப்பது என்பதே கடினமான விடயம். வரவு செலவு திட்டம் தயாரிப்பதற்கு முன் நாட்டின் வருமானத்தை பார்த்தால் வரல செலவு திட்டமே இருக்க முடியாது இப்படிப்பட்ட நிலையில் எதிர் தரப்பினர் மக்களுக்கு வரவு செலவு திட்டத்தில் எதுவுமில்லை அரச ஊழியர்களுக்கு சுமை என்றெல்லாம் கூறுவது இக்காலக்கட்டத்தில் கூறுவது பொருத்தமட்டது, மலையகத்தை பொருத்த மட்டில் கடந்த நல்லாட்சி காலத்தில் மலையக மக்களுக்கு 15000 வீடுகள் என்றெல்லாம் வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் எத்தனை வீடுகளை கட்டிக்கொடுத்தார்கள் அன்று யுத்தம் இருக்கவில்லை கொரோனா இருக்கவில்லை பாரிய பிரச்சினைகள் இருக்கவில்லை அந்நிய நாட்டின் உதவிகள் நிறைய இருந்தன.இந்திய அரசாங்கத்தின் நிதி உதவி மாத்திரம் இல்லாவிட்டால் குறிப்பிட்ட அமைச்சருமில்லை அந்த அமைச்சரின் தொழிற்சங்கமுமில்லை என அவர் தெரிவித்தார்.

இது குறித்து ஆட்டோ சாரதி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் கொரோனா தொற்று காரணமாக பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியது ஆட்டோ தொழிலில் ஈடுபடுபவர்கள் தான் ஆனால் அவர்களுக்காக இந்த அரசாங்கம் எந்தவித நிவாரணமும் பெற்றுக்கொடுக்கவில்லை லீசிங் கட்ட முடியாது பலர் பலவிதமான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர் ஆனால் அவர்கள் சார்பில் இந்த அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

மற்றுமொருவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் வரவு செலவு திட்டத்தில் துண்டு விழும் தொகையினை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது தொடர்பாக எவ்வித விளக்கமும் இல்லை என தெரிவித்தார்.3

கே.சுந்தரலிங்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here