தென் மாகாணத்தில் 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 514 பாடசாலைகளை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் திறக்க எதிர்பார்த்துள்ளதாக தென் மாகாண கல்வியமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்தார்.
6ஆம் திகதி முதல் பாடசாலைகளைச் சுத்தம் செய்யவும், கிருமி நீக்கம் செய்யவும் குழு திட்டமிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளிடமிருந்து தேவையான உதவிகள் பெறப்படும் என்று நம்பப்படுகிறது.