பாடசாலை மாணவன் 7 நாட்களாக மாயம் – தீவிர தேடுதல் பணியில் பொலிஸார்!

0
178

கொட்டாவ பகுதியில் 16 வயதான பாடசாலை மாணவன் ஒருவர் கடந்த 7 நாட்களாக காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிறுவர் கடந்த 9ஆம் திகதி பிற்பகல் 1.30 மணியளவில் இரண்டு சிறுவர்களுடன் மஹல்வராவ பகுதியிலுள்ள தொலைபேசி வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சென்றுள்ளார்.

பின்னர் மீண்டும் கொட்டாவ நகருக்கு திரும்பி பேருந்தில் மாகும்புர பகுதிக்கு செல்லும் சி.சி.ரி.வி காணொளி காட்சிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

பின்னர் அவர் பேருந்தில் கொட்டாவ பக்கம் மீள திரும்பியுள்ளார்.எனினும் அதன் பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

இந்த நிலையில் குறித்த சிறுவரை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கொட்டாவ காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here