பசியுடன் பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை நிபுணத்துவ அதிபர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.பாடசாலை அடிப்படையிலான போசாக்கு நடவடிக்கைகள் கூட ஸ்தம்பிதமடைந்துள்ளதாக அதன் தலைவர் சுஜீவ விமலரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
புத்தகங்கள், காலணிகள், சீருடைகள் ஆகியவற்றின் விலை 200% உயர்ந்துள்ளதுடன் உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது என்றார்.
மேலும், காலையில் பாடசாலை கூட்டத்தில் சில மாணவர்கள் மயங்கி விழுந்ததாகவும், அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் காலை உணவை உட்கொள்ளாதது தெரியவந்ததாகவும் அவர் கூறினார்.
முன்பு ஒரு வகுப்பில் நான்கைந்து மாணவர்கள் பசியுடன் பாடசாலைக்கு வந்ததாகவும், தற்போது பொருளாதார நெருக்கடி காரணமாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்தார்.