ராஜகிரிய கலபலுவ பிரதேசத்தில் நபர் ஒருவரை தாக்கியதாக மொடல் அழகி பியுமி ஹன்சமலியின் மகனை வெலிக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கார் விபத்து ஒன்றுக்கு பின்னர் மற்றொரு குழுவுடன் நடந்ததாகக் கூறப்படும் தாக்குதல் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், மேலும் சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இதேவேளை தாக்கப்பட்ட நபரின் மனைவி,
“என் கணவர் அதை நெலும் பிளேஸ் பகுதிக்கு சென்ற போது அங்கிருந்தவர்கள் தங்கள் குழுவில் இதை ஒருவரை எனது கணவர் தாக்கியதாக கருதி தாக்கியுள்ளனர்.
என் கணவர் எதுவும் செய்யவில்லை. அதைப் பார்க்கச் சென்ற நிலையில் காரணமே இல்லாமல் அவரை அடித்துள்ளார்கள். சுமார் 10 தலைக்கவசங்கள் தலை மற்றும் கையில் பட்டன. பியூமியின் மகன் தாக்கினார் அவருடன் சுமார் 20 பேர் இருந்தார்கள்” என எனது கணவர் கூறினார் என தாக்கப்பட்டவரின் மனைவி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.