பிலிப்பைன்ஸின் மின்டானாவோ பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி இன்று (28) காலை 7.07 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிலிப்பைன்ஸின் டாவோ ஓக்ஸிடென்டல் மாகாணத்திலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் 101 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என பிலிப்பைன்ஸ் புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.