றாகம புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை 07.55 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
புகையிரத பாதையின் குறுக்காக கடந்த சென்ற போதே குறித்த நால்வரும் புகையிரதத்துடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.