புதுடெல்லி என்.சி.ஆர் பகுதியில் இன்று வியாழக்கிழமை (10) 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹரியானாவின் ஜஜ்ஜாரிலிருந்து வடகிழக்கே 4 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுளு்ளது.
குறித்த நிலநடுக்கமானது, நொய்டா, காசியாபாத், குருகிராம் மற்றும் ஃபரிதாபாத் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.