பூண்டுலோயாவில் அம்மன் கோவில் உடைப்பு. திருடர்களை தேடி போலிஸ் வலைவீச்சு.

0
199

பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சீன் தோட்டத்தில் அம்மன் கோவில் உடைத்து பெருமதியான பதிமூன்று அம்மன் தாலி பொட்டு உட்பட உண்டியல் காசும் களவாடப்பட்டுள்ளது.

02/02/2022 இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் குறித்த தோட்டத்தின் கோவில் கமிட்டி உத்தியோகத்தர்கள் மற்றும் தோட்ட தலைவர்கள் பூண்டுலோயா பொலிஸ் நிலையத்தில் கொடுத்த முறைப்பாட்டுக்கு அமைய பூண்டுலோயா பொலிஸார் போலிஸ் மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் திருடர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here