பெரண்டினா நிறுவனத்தின் ஊடாக சுகாதாரம் பற்றிய தெளிவூட்டல் கருத்தரங்கு கிரேட்வெஸ்டன் பாடசாலையில் இடம்பெற்றது.
பெரண்டினா நிறுவனத்தின் கிரேட்வெஸ்டன் பொறுப்பதிகாரி அதிகாரி சிவசந்ரு தலைமையில் லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிரேட் வெஸ்டன் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்கு சுத்தம் சுகம் தரும் எனும் தொனிப்பொருளிலில் கருத்தரங்கு இன்று இடம்பெற்றது.
கொட்டகலை சுகாதார பரிசோதகர் ஊடாக குறித்த கருத்தரங்கு இடம்பெற்றது.இதன்போது மாணவர்கள் தன்னையும் தான் சுற்றியுள்ள சூழலையும் எவ்வாறு சுத்தமாக வைத்திருப்பது தொடர்பாக தெளிவூட்டப்பட்டது.இதன்போது கிரேட்வெஸ்டன் குடும்பநல உத்தியோகத்தர்,பெரண்டினா நிறுவன கிரேட்வெஸ்டன் பகுதி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் புஸ்பநாதன் மோகன், ரிஸ்வான் மற்றும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.